Thursday, October 14, 2010

அறியா காதல்

உதடு சுழித்து ஊதுகிறாய்
பென்சில் சில்லுகளை
பெண்ணே சில்லென்ற கை கொண்டென் கண் திறந்து,
என் ஆவி எரிகிறது
உன் வாய் மொழிந்த ஆக்சிஜன் கொண்டு

கண்கள் மூடின தானாக உந்தன்
நேர்பார்வை எதிர்க்காமல் ,
பென்சில் மேல் பழி செய்து

பெண்ணே உன்
கண் பாய்ந்தால் நெஞ்சத்தில்
காதல் பதியமாகும்

I love u சொல்ல வந்தேன்
Eye கொடுத்த நம்பிக்கையில்
அர்த்தமற்ற புன்னகை உதிர்த்து
அர்த்தம் புரியலன்னு
சொல்லி சென்றாய்
தந்தைக்கு transfer என்று

கடல் கூட துட்சம் ஆகும் என்
காதல் தாகத்திற்கு
கண்ணீரே மிச்சம் ஆனது
கண்ணே நீ சென்ற பிறகு

நாத்திகம் மறந்து போனேன்,
நாட்கள் பல கழித்து
நானுனை கண்டதுமே...


குறிப்பு:
இது என் முதல் முயற்சி. நண்பனிடம் கதை கேட்டு காட்சிகளுக்கு கவிதை எழுதுவது.
முடிந்த மட்டும் முயன்றிருக்கிறேன், முறையற்ற பிழைகளை முறையே கண்டித்திடுங்கள் களைந்திட...

No comments:

Post a Comment