Friday, August 27, 2010

மனத் துளிகள்


என் உடனிருப்பவர்களின் ஆசைகளே
என்னைச் செலுத்தும் விசை...


தொலைவிலொரு புள்ளி
நோக்குகையில் நெருங்குகிறது...
நெருங்குகையில் விலகுகிறது...


மதம் மாற சட்டம்
வகை செய்யும்...
சாதிகள் மட்டுமென்ன‌
குற்றம் செய்தனவோ..?

Tuesday, August 24, 2010

மனதிலே

சொல்ல நினைக்கையில்
வாய்ப்பு இல்லை
வாய்ப்பு கிடைக்கையில்
வார்த்தை இல்லை கூற‌...

என்னுள்ளே சிறு
எண்ணம்‍ ‍ அது
உன்னுள்ளே உரு
பெற்றிருந்தால்
உன் உள்ளம்
ஏற்றுக் கொண்டால்...

மணம் கொள்ள‌
மனம் கொள்வீர்...

என் எண் சொல்கிறேன்...
என் சொல்வீரோ..!?