Friday, February 6, 2009

புறை

ஒரு மதிய உணவின் போது புறை ஏற, அருகில் அமர்ந்தவர்களுக்கு சில சோற்று பருக்கைகளை பகிர்கையில் (சந்தேகமின்றி எச்சில் பருக்கைதான்) என் சிந்தையிலிருந்து தெறித்த கவிதை.

எனக்கு புறை ஏறும்
போதெல்லாம்
உன்னை நினைக்கிறேன்...

Monday, February 2, 2009

தாகம்

நான் தாகத்தில் தவிக்கையில்

சாக்கடையில் நீர் அருந்தும்

நாய்

அறிமுகம்

நானும் பச்சையப்பனும், கல்லூரியில் படித்தகாலங்களில் இருந்து கவிதைகள் என்ற பெயரில் கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டோம் :)

இப்போது அதை இன்னும் கொஞ்சம் தீவிரமாக செய்ய எண்ணியுள்ளோம். ஏற்கனவே என்னுடைய பதிவு தமிழ்மணத்தில் உள்ளது.

கவிதை பற்றிய வரைமுறைகள் ஏதுமின்றி, கன்னா பின்னாவென்று எழுதி அதற்கு கவிதை என்று பெயர் சூட்டும் அந்த கொடுமையை நாங்களும் இனி செய்யக்கூடும்.

உங்கள் மேலான ஆதரவையும், திட்டுகளையும் தெரிவித்து உங்கள் பொன்னான ஓட்டுக்களை எங்களுக்கே போடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

ஒரு குட்டி கவிதையுடன்:

தெரிந்த இடத்தில் நடந்தாலும்,
நடக்கும்போது தெரிவதில்லை
சினிமா ஷூட்டிங்

கண்ணாடி

அவள் முகம் பார்க்க - என்

கண்கள் ஆடிகளாயின...

பசி Hunger

காம்பென என் கைவிரல்களை சூப்புகையில்
என் கடை நரம்பும் உணர்ந்தன
உன் பசியை - நெரிசலான
ஒரு பேருந்து பிரயாணத்தில்