Monday, February 2, 2009

அறிமுகம்

நானும் பச்சையப்பனும், கல்லூரியில் படித்தகாலங்களில் இருந்து கவிதைகள் என்ற பெயரில் கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டோம் :)

இப்போது அதை இன்னும் கொஞ்சம் தீவிரமாக செய்ய எண்ணியுள்ளோம். ஏற்கனவே என்னுடைய பதிவு தமிழ்மணத்தில் உள்ளது.

கவிதை பற்றிய வரைமுறைகள் ஏதுமின்றி, கன்னா பின்னாவென்று எழுதி அதற்கு கவிதை என்று பெயர் சூட்டும் அந்த கொடுமையை நாங்களும் இனி செய்யக்கூடும்.

உங்கள் மேலான ஆதரவையும், திட்டுகளையும் தெரிவித்து உங்கள் பொன்னான ஓட்டுக்களை எங்களுக்கே போடுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

ஒரு குட்டி கவிதையுடன்:

தெரிந்த இடத்தில் நடந்தாலும்,
நடக்கும்போது தெரிவதில்லை
சினிமா ஷூட்டிங்

2 comments:

  1. நானும் பச்சையப்பனும், கல்லூரியில் படித்தகாலங்களில் இருந்து கவிதைகள் என்ற பெயரில் கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டோம்////


    உங்கள் கொடுமைகளை நிறைய எதிர்பார்க்கிறொம்.

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. தெரிந்த இடத்தில் நடந்தாலும்,
    நடக்கும்போது தெரிவதில்லை
    சினிமா ஷூட்டிங்//

    செல்லாது செல்லாது!!

    ReplyDelete