Thursday, August 6, 2009

இடைத்தேர்தல்

இலவசங்களுக்கு இணைப்பாகும்
ஓட்டு குவியலுக்கிடையே ‍இன்னும்
ஒட்டிக் கிடக்கின்றது நம்
ஜன நாயகத்தின் உயிர்...
உழுபவனின் வயிற்றைப் போல...
நெய்பவனின் ஆடையைப் போல...

இடைத்தேர்தல்
இடை
திரைப்படப் பாடலுக்கிடையிடையே
தோன்றுவது போல‌
நடக்கிறது...

கட்சித் தாவல்கள் நம்
மூதாதையோர்களின் எஞ்சிய‌
மரபணு படுத்தும் பாடு...

முறைப்படி கொள்முதலாகா
நெற்களஞ்சியம்
விற்கப்படுகிறது ரூபாய்க்கு...

ஊருக்கு பொதுவாகவொரு
தொலைக்காட்சி எனும் நிலைமாறி
வீட்டிற்கொன்றென சமத்துவம்
பேசுகிறது...

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே
மருத்துவம் தேவைப்படுவதால்
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
தனியாரை நாடிச் செல்லுமாறு*...

ஓட்டுப் பதிவு வீதம் அதிகரிக்க...
ஜன நாயகம் உயிர்த்தெழ...
மக்களோடு மக்களாக‌
எட்டே கோடியில் வீடுகட்டி வாழும்
ஏழைப் பங்காளனுக்கு
மறந்தும் வாக்களிப்பீர்...

* விதிமுறைகளுக்கு உட்பட்டது...

No comments:

Post a Comment