Sunday, May 3, 2009

தமிழினத் தலைவர்

காஞ்சீபுரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் முகத்தையும் மனதையும் கண்டு எழுந்த போலிக் கோபத்தில் எழுதிய சில வரிகள்...

தலைவா எங்களுக்கு
வழிகாட்டுங்கள்...
அனுமன் போல் சென்று
இலங்கையை எ( தி ) ரிக்கிறோம்...
எங்கள் நெருப்பு
தீயவர்களை மட்டும் சுடும்...
நம்பிய தொண்டனை வழிநடத்துவான்
நல்ல தலைவன்...
தமிழினத் தலைவரெனப் படுபவரே
வழி தெரியாமல் விழிக்காதீர்...
என் செய்வதென்று கை விரிக்காதீர்...
உங்களால் முடியும்
எங்கள் இரத்தங்களை கண்டு
கண்ணீர் விடவும்...
நாங்கள் உணவின்றி இறக்கையில்
ஒரு வேலை உணவை துறக்கவும்...
எங்கள் ஓலங்களுக்கு நடுவே
தந்தி கம்பிகளை மீட்டவும்...
மட்டுமே முடியும்... மிஞ்சினால்
மனிதச் சங்கிலியும், கடை அடைப்பும்...
சிங்கத் தமிழர்களின் உயிர்க் காற்று
சிங்கள அரசை அசைக்கிறதோ இல்லையோ
தெரிந்தோ தெரியாமலோ
தமிழக அரசின் நாற்காலியை
ஆட்டம் காணச் செய்து விட்டது...
குடும்பத்தையே தாண்டிவர இயலா
குரலூவியத்தின் அறிக்கை
"தமிழுக்கும் தமிழனுக்கும் ஆபத்தென்றால் நான் போராடுவேன்"
எங்களின் ஆழ்ந்த துக்கத்திலும்
சற்றே நகைப்பைத் தருகிறது... நன்றி
மதுரை மைந்தனின் பாதுகாப்பிற்கு
மத்திய படையை கேளுங்கள் ...
குண்டுகளின் கூடாரம் நடுவே
நாங்கள் சுகமாக உள்ளோம்...
மனைவியார், துணைவியார், மகள், பேரன்,
புத்திரர்கள் மற்றும் சூத்திரர்கள் சுழ
வெற்றிப் போராட்டம் முடித்திரோ..?
"சேது விற்கோ பாலம் அமைப்போம்" என்றான் பாரதி
எங்கள் தளபதியால் தேங்கும் சிறு
சேறுக்கும் சிக்னலுக்கும் பாலமமைக் கவே
நேரம் போதவில்லை... இடையில் சேது எங்கே..?
ஐயா போரை நிறுத்த இராணுவம் வேண்டாம்
இரத்தத்தில் தமிழ்ப் பற்றுரிய
தூதுவரை நிற்பந்திக்கலமே..!
அடுத்த முறை உணவு, மருந்து
கொணரும் கப்பலுடன் நம்பினால்
இரவா வரமருளும் அமிர்தத்தையும்
இறந்தவரை உயிர்ப்பிக்கும் மருந்தையும்
அனுப்பிடுங்கள் ... எங்கள் அனுதாபியே..!

2 comments:

  1. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

    ReplyDelete
  2. "அரசியலில் பிழைப்பதற்கு அறம் மாற்றாகும்"

    ReplyDelete