Monday, May 24, 2010

மண வாழ்த்து

ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே *

அகநா னூற்றின் வழி பற்றி
அகம் உடையார் கைப் பற்றி
அவ்வப்போது கர்வமெனும் களை பறித்து
அளவான பொய்கள் பல பெற்றெடுத்து
அழகான காதல் கலை கற்றிடுவீர்
அற்புதமான காதல் கதிர் வளர்த்திடுவீர்

ஈதலும்** துய்த்தலும்***
இருவரின் இல்வாழ்வாக வாழ்த்துவன்...

மணநாள் விக்ருதி வைகாசி பனிரெண்டு

----------------------------------------------------------------------
* நின்னையே யன்றி வேறுஎத்துணையும் இல்லேன்
** இரவலர்க்குக் கொடுத்தலும்
*** இன்பங்களை அனுபவித்தலும்

No comments:

Post a Comment